வளைகுடா போறீங்களா?

இங்கே தினசரிகளில் இஸ்ரேல்,பாலஸ்தீன பிரச்சனைகளைத் தவிர வெறெதுவும் செய்தி இல்லை.வானொலிகளும் இஸ்ரேல்,பாலஸ்தீனம் -ஈராக்,அமெரிக்கா விசயங்களையே திரும்ப திரும்ப ஒலிக்கின்றன.மற்றபடி சுயபிரதேசம் பற்றிய செய்திகளெல்லாம் இருட்டடிப்பு தான்.யாருக்கு தைரியம் இருக்கு.உள்ளதை உள்ளபடியே எழுத.

இந்தியர் என்றால் ரொம்பபேருக்கு இளக்காரம்.மேற்க்கத்திய வெள்ளைதோலைக் கண்டால் ரொம்ப மரியாதை.அவன் தப்பு தப்பாய் பண்ணினாலும் கண்டுகிறது இல்லை.நம்மவர்கள் தும்மினாலும் சிறை பிடிக்கிறார்கள்.அதே வெள்ளையர்கள் அப்பக்கமாய் சற்று மறைந்தால் இவர்கள் காரி துப்புகிறார்கள்.முன்புகொடுத்தது பயத்தினால் கொடுத்த மரியாதை போலும்.

ஐரோப்பியர்கள் எண்ணை கண்டுபிடித்து கொடுத்திருக்கிறார்கள்.அமெரிக்கரின் ஈராக் ஆட்டம் அனைவருக்கும் தெரியும்.அதனால் அவர்களுக்கு நல்ல மரியாதை இங்கு.

இந்தியா மாதிரியா?.இங்கு வெள்ளையன் ஒருத்தனுக்கு நெறி கட்டினால் அவன் நாடு ஒடோடிவருகிறதே.
மேலும் இவர்களுக்கு சொந்தமாய் படை பலம் இல்லை.இராக் மாதிரி எவனாவது ஆக்கிரமிக்க வந்தால் வெள்ளையர் தான் காப்பாற்ற வேண்டும்.

அதற்காக இந்தியரை ஏன் இளக்காரமாக்கவேண்டும்.சொல்லப்போனால் இப்பிரதேசத்தை கட்டி எழுப்பியவர்கள் இந்தியர் தான்.இன்றைய தேதியிலும் நம் பங்களிப்பு மிக மகத்தானது.ஆனால் நாம் எப்பொழுதுமே நம்மை பலமாய் காட்டிக்கொண்டது இல்லை.பேட்டை ரௌடிக்கு தானே இக்காலங்களில் மரியாதை.சாதுக்களை எந்த நாய் கண்டுக்க போகிறது.
இதனால் தான் லேடென்களும்,உசேன்களும் இங்கு பிரபலம்.லேடெனுக்கும்,உசேனுக்கும் எல்லொருமே இங்கு விசிறிகள்.

அமெரிக்கபானம் என பெப்சியை உதறுபவர்கள்.ஆனால் அமெரிக்க இறக்குமதி கார் ஏறி மெக்டொனால்ட் போய் சாப்பிடுவார்கள்.பயன்படுத்தும்ஆப்பரேடிங் ஸிஸ்டம் விண்டோஸ்.

நம்ம ஆட்கள் கெட்டிக்காரர்கள்.வந்தோமா சம்பாதித்தோமா.போனோமா என்று.எவர் இளக்காரங்களையும் கண்டுகிறதில்லை.எனென்றால் நமக்கொரு காலம் வருகின்றது.ஓரு காலத்தில் செல்வம் கொழித்த நாடுதான் நம்மூர்.ஏதொ
தொழில்புரட்சி காலத்தில் நம்மவர்கள் தூங்கிவிட்டிருந்தோம்.இல்லை இல்லை அடிமைதனத்தில் சிக்கியிருந்தோம்.அதிலிருந்து
விடுபட போராடிக்கொண்டிருந்தோம்.இப்போது உழைப்பால் உயர்ந்து கொண்டுள்ளோம்.இனி நாம் மனித வளத்தால் உலகை கொள்ளையடிப்போம்.ஆனைக்கொரு காலம்.பூனைக்கொரு காலம்.நிச்சயமாக.
(பட்டென தோன்றியது.ஏதோ நாடு மத இன துவேசத்திலோ,வெறியிலோ எழுதியதுஅல்ல.வருத்தியிருந்தால் மன்னிக்கவும்)

பகரினும்,சௌதியாவும்

பகரினில்விமானம் இறங்கும்போதே ஒரு வித்தியாசமான உணர்வு.என்னடா கடல்லயா விமானத்தை இறக்க போகிறார்கள் என்று.
ஒரு குறும்தீவு இது.சுற்றி கடல்.
நடுவே கண்ணாடி மாளிகைகள் அடுக்கடுக்காய்.
பளீர்சாலைகள்.
இருமருங்கிலும் செயற்கையாய் பச்சை ஆக்கியிருக்கிறார்கள்.
அரபு நாடென்றாலும் ரொம்ப கெடுபிடியில்லை.அழகிய நங்கைகள் நவ நாகரீக உடைகளில் ஆங்காங்கே.
சந்தேகித்தால் முழு பயணப்பெட்டியையும் விமானநிலயத்தில் சோதிக்கிறார்கள்,போதை வஸ்துக்களுக்காக.
அப்பப்போ ஏதாவதொரு திருவிழா நடந்துகொண்டேஇருக்கிறது.
பகரினில் வாழ்கைகொஞ்சம் ஜாலிதான்.
இங்கிருந்து தரைவழியாகவே பொய்விடலாம் சௌதி அரேபியாவுக்கு.எட்டும் தூரம்.
பகரின் கடல் தீவிலிருந்து சௌதிஅராபிய நிலப்பரப்புக்கு நீண்ட கடல்மேல் பாலம் அமைத்திருக்கிறார்கள்.
சுமார் 26 கிலோமீட்டர்கள்.
சுற்றிலும் கடலைபார்த்த படியே பயணிக்கலாம்.
நடுவில் சௌதியில்நுழையும் போது கெடுபிடி ஆரம்பிக்கிறது.
சூழலில் ஒருவித மான இறுக்கம் வந்துவிடும்.
வெட்டு ஒன்று துண்டு இரண்டு.
உங்கள் பயணபெட்டிகள் சுத்தமாய் அலசப்படும்.எதைவேண்டுமானாலும் அவர்கள் குப்பையாய் தூக்கி எறியலாம்.
பெண்கள் முழு பர்தா அணிய துவங்கிவிடுகின்றனர்.கருப்பாய் முழுநீள அங்கி அவ்ளோதான்.
வாகனங்களெல்லாம் இறக்குமதி செய்யப்பட்ட பழம் பெரும் வாகனங்கள்.
மண்ணும் சேறும் அப்பியிருக்கிறது.
பெரும்பாலான வாகனங்களில் பலபெண்கள் உட்பட குடும்பம் குடும்பமாய் குந்தியிருக்கிறார்கள்.
பாகிஸ்தானியரும்,பங்ளாதேசியர்களும்.மற்றும் இந்தியர்களும் ஏறெடுத்துக்கூட பார்ப்பது இல்லை.
பயம்.
எல்லோருக்கும் சட்டமும்,விதிகளும் நடப்பு நிலவரங்களும் நன்கு தெரிகிறது.
முழு பரிசோதனைக்கு பின் சௌதிக்குள் நுழைகின்றோம்.
அநேக ஏன் எல்லா முஸ்லீம்களுக்கும் அது ஒரு புனிதமான கனவு பிரதேசம்.
"டேய் நீ ரொம்ப குடுத்துவச்சவன்" என என் இஸ்லாமிய தோழி சொன்னது நினைவுக்கு வந்தது.
நீண்ட பரந்த சாலைகள்.இருபுறமும் குப்பைகள்.
ஓடும் வாகனங்களும் அப்படியே.
அல்கோபார்,தமாம் என்று அந்த பயணம் தொடர்கிறது.
குடும்பம் குடும்பமாய் வாழ்கிறவர்கள் பாக்கியசாலிகள்.அதுவும் முஸ்லிமாய் இருந்தால் மிக்க நலம்.
எல்லாமே இரண்டு இரண்டு.பெண்களுக்கொரு மார்க்கெட் .ஆண்களுக்கொரு மார்க்கெட் இப்படியாக.
தனியாக வேலை செய்யும் ஆண்கள் பெரிய மூடப்பட்ட சுற்று சுவர்களுக்குள் வசிக்கிறார்கள்.
ஒவ்வொரு காம்ப்பவுண்டும் ஒரு உலகம்.
அராம்கோ-பெட்ரோல் கம்பனி.பெரும்பாலான தொழில்கள் இதை சார்ந்தே இருக்கின்றன.
இந்தியன் கல்விச்சாலைகளை பார்க்கமுடிகிறது.
சாலைகளில் பெண்களை காண முடிவதில்லை.
கொஞ்சம் சுதந்திரமாய்(?) இருக்க அப்பப்போ பகரின் வந்து செல்கிறார்கள் பலர்.இதில் சௌதியர்களும் உட்பட.
நம்மஊர் ஆட்கள் ஒராண்டோ அல்லது ஈராண்டோ கழித்து விடுமுறையில் இந்தியா போக பகரின் வரும் போது அங்கு நுழைந்ததும் அவர்கள் சந்தோசம் பார்க்க வேண்டுமே மகிழ்ச்சி தெளிவாய் தெரிகிறது.
நவநாகரீக பெண்களையும் சிட்டென காரில் பறக்கும் பெண்களையும் உற்று பார்க்கிறார்கள்.ஒருகணம் சிறு பெருமூச்சுவிட்டு இதயம் அடங்குகிறது.ஒருகாலத்தில் ஆடிய ஆட்டமென்ன இப்பொ இது தான் நம் வாழ்கை.இப்படித்தான் எழுதியிருக்கிறது.இப்படிதான் நாம்
பயணித்தாகவேண்டும் என்று அவர்கள் நினைப்பது போல் தோன்றும்.

Add a New Comment
or Sign in as Wikidot user
(will not be published)
- +
Unless otherwise stated, the content of this page is licensed under Creative Commons Attribution-ShareAlike 3.0 License